பிரபு தேவாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தில் ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
பீட்சா படம் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பல குறும்படங்களை இயக்கி சின்னத்திரைக்கு மிகவும் பரிட்சயமானவர். அவரின் ஜிகர்தண்டா திரைப்படம் அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. அதனைத்தொடர்ந்து இறைவி திரைப்படமும் வியாபார ரீதியாக வெற்றி அடையவிட்டாலும், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக நடிகர் பிரபு தேவாவை வைத்து படம் இயக்கி கொண்டிருக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர் கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான பீட்சாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் ரம்யா நடிக்கிறார். இந்த கேரக்டர் கௌரவ தோற்றம் என்றாலும் கூட படத்தை முன்னோக்கி நகர்த்தும் கேரக்டர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரம்யா தனது பகுதிகளை ஏற்கனவே நடித்து கொடுத்துவிட்டார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. டிமாண்டி காலனி, ஜில் ஜங் ஜக் படங்களில் நடித்த சனந்த் ரெட்டியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற திரு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்திற்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை.
பீட்சா படம் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பல குறும்படங்களை இயக்கி சின்னத்திரைக்கு மிகவும் பரிட்சயமானவர். அவரின் ஜிகர்தண்டா திரைப்படம் அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. அதனைத்தொடர்ந்து இறைவி திரைப்படமும் வியாபார ரீதியாக வெற்றி அடையவிட்டாலும், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக நடிகர் பிரபு தேவாவை வைத்து படம் இயக்கி கொண்டிருக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர் கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான பீட்சாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் ரம்யா நடிக்கிறார். இந்த கேரக்டர் கௌரவ தோற்றம் என்றாலும் கூட படத்தை முன்னோக்கி நகர்த்தும் கேரக்டர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரம்யா தனது பகுதிகளை ஏற்கனவே நடித்து கொடுத்துவிட்டார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. டிமாண்டி காலனி, ஜில் ஜங் ஜக் படங்களில் நடித்த சனந்த் ரெட்டியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற திரு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்திற்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை.