ஆப்நகரம்

கேரளா மீது கவனம் செலுத்துங்க : துல்கர் சல்மான் வேண்டுகோள்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மீது தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நடிகர் துல்கர் சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 17 Aug 2018, 12:36 pm
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மீது தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நடிகர் துல்கர் சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil 6


கேரளாவில் வரலாறு காணாத பெய்துவரும் கனமழையால், பொதுமக்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக, கேரள மக்களுக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இடுக்கி மக்களுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக, லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, சினிமா துறையினரும் தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மீது தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நடிகர் துல்கர் சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மீது அவசரமாக தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கான அதிகரித்துக்கொண்டே உள்ளது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்