ஆப்நகரம்

Bigg Boss கவின் படும் கஷ்டத்தை பார்த்து ரேஷ்மாவுக்கு இதயமே நொறுங்கிடுச்சாம்

கவினுக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் போட்டியாளரான ரேஷ்மா குரல் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 18 Sep 2019, 3:44 pm
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் அந்த வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் பழகி வந்த இவர் அதிலிருந்து முதலில் சாக்ஷியை தேர்ந்தெடுத்துக் காதலித்து வந்தார். பிறகு அவரை காதலித்துப் போர் அடித்துவிட்டதால் அப்படியே ரூட்டை லோஸ்லியா பக்கம் திருப்பி தனது காதல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். சாக்ஷி வெளியேறிய பிறகு இவர்கள் இருவரும் இணைந்து போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருந்தது.
Samayam Tamil kavin and reshma


அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கடந்த வாரம் லோஸ்லியா தந்தை வந்து அவரை கண்டிக்க, இருவரும் சற்று விளக்கி இருப்பது போல் தெரிகிறது. இருப்பினும் கவினை ஒரு சிலர் மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர். மற்றொரு பக்கம் கவினின் அம்மா மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இப்படி தொடர்ச்சியாக அவர் வாழ்க்கையில் அடிமேல், அடிமேல் விழுந்து கொண்டே இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் கடவுளின் குழந்தைகள்: பிக் பாஸ் சாக்ஷி புகழாரம்

இதை கண்ட சக போட்டியாளரான ரேஷ்மா அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் இதயம் நொறுங்கிவிட்டது கவின். என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஒரு விளையாட்டு என்ற பெயரில் அவர் பகிரங்கமாக அவமானப்படுத்தப்படுகிறார். ஆனால் அப்போதும் அவர் மிகவும் வலிமையாக, சிரித்து கொண்டே இருப்பதைப் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது.

ரேஷ்மா பதிவு


மக்கள் பேசும் அனைத்து எதிர்மறைகளையும் தவிர, என்னைப் பொறுத்தவரை அவர் அன்பானவர். நான் அவருக்காகவும், அவரது குடும்பம் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட கவின் ரசிகர்கள் 'உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி' என்று கமெண்ட் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்