ஆப்நகரம்

Kanchana: எனது ரூ.80 கோடி மதிப்பிலான சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்தேன்; நடிகை காஞ்சனா!

சென்னை: தனது சொத்துகள் மீட்கப்பட்டது குறித்தும், அதனை கோவிலுக்கு எழுதி வைத்த நிகழ்வு குறித்தும் பழம்பெரும் நடிகை காஞ்சனா பகிர்ந்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 26 Sep 2018, 11:17 am
கடந்த 1960 மற்றும் 70களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக நடிகை காஞ்சனா இருந்தார். அவருக்கு தற்போது 79 வயதாகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil Kanchana


இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து காஞ்சனா பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், விமானப் பணிப்பெண்ணாக இருந்தேன். இயக்குநர் ஸ்ரீதர் என்னைப் பார்த்து ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

எனது உண்மையான பெயர் வசுந்தரா தேவி. ஏற்கனவே வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக் கொண்டிருந்தார். எனவே என் பெயரை காஞ்சனா என்று ஸ்ரீதர் மாற்றினார். 46 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன்.

நான் சம்பாதித்த பணத்தை, சென்னை தி.நகரில் சொத்துகள் வாங்கிப் போட்டேன். ஆனால் எனது உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ரூ.80 கோடி மதிப்பிலான சொத்துகளை மீட்டெடுத்தேன்.

எனது வேண்டுதலின் படி, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்தேன். திருமணம் செய்து கொள்ளாமலே என் வாழ்க்கையை கழித்து விட்டேன். தற்போது என் தங்கையின் பராமரிப்பில் நன்றாக இருக்கிறேன் என்று கூறினார்.

Restored my assets to the temple says actress Kanchana.

அடுத்த செய்தி

டிரெண்டிங்