ஆப்நகரம்

பயங்கர நோயைப் பற்றி படமாக்கவுள்ள பிரபல இயக்குனர்!

பயங்கர நோயான வைரஸ் நோய் பரவலை பற்றி பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா படமாக எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 16 Jun 2018, 12:27 pm
பயங்கர நோயான வைரஸ் நோய் பரவலை பற்றி பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா படமாக எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil RGV


கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டு அழகியை வைத்து கவர்ச்சி படம் இயக்கி வெளியிட்டார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இந்தப் படம் ஆபாசபடம்போல் இருப்பதாக கூறி பலரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது.

இதையடுத்து நாகார்ஜூனாவை வைத்து ‘ஆபீசர்’ என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கினார். சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதையடுத்து ராம்கோபால் வர்மா அடுத்த படம் இயக்க நீண்ட நாள் ஆகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் உடனடியாக அவர் இந்திபடமொன்றை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுபற்றி ராம்கோபால் வர்மா கூறும்போது, ‘‘இந்திய இளைஞர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகிறார். உடற்பரிசோதனை செய்தபோது அவருக்கு பயங்கரமான நோய் பரப்பும் வைரஸ் இருப்பது தெரியவருகிறது. அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் கதை’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்