ஆப்நகரம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் விமான பணிப்பெண்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் விமானப் பணிப்பெண் ஒருவர் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்.

Samayam Tamil 8 Apr 2019, 4:58 pm
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. இந்தப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஹீரோயினியாக நடிப்பவர் விமானப் பணிப்பெண்ணான பிரபல மாடலிங் அழகி ஷிரின் காஞ்ச்வாலா.
Samayam Tamil nenjamumdu


இந்தப் படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் கார்த்திக் வேணுகோபாலன். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா கூறுகையில், “நான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மூன்ற ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப் பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். ஒட்டு மொத்த குழுவும் என்னிடம் மிகவும் நட்புடன் பழகினர்.

நான் இந்தப் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ரியோ ராஜ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவர் இங்கு பல கடினமான காட்சிகளைக்கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். இதே போன்று கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்