ஆப்நகரம்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’!

‘கனா’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் 2வது படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 21 Feb 2019, 2:10 pm
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு அறிமுகமானவர். தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
Samayam Tamil rio-raj


கடந்த வருடம் ‘கனா’ என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் என்பவரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து வந்தார். இந்தப் படத்தில் ஷெரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடக்கிறது.

இந்த நிலையில் படக்குழு இப்படத்திற்கு எம்.ஜி.ஆரின் நடித்த படத்தின் பாடலான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்