ஆப்நகரம்

ரித்விகாவைப் பெற்றதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்: தந்தை உருக்கம்!

நான் ரித்விகாவைப் பெற்றதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை என்று ரித்விகாவின் தந்தை மேடையில் உருக்கமாகப் பேசினார்.

Samayam Tamil 1 Oct 2018, 5:18 pm
பிக்பாஸ் சீசன் 2, டைட்டில் வின்னராக நடிகை ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேடையில் அவர் பெயரை அறிவித்ததும், ரித்விகா ஆனந்த கண்ணீரில் மூழ்கினார். அவரின் கண்ணீரைப் பார்த்ததும் பார்வையாளர்கள் கண்களிலும் நீர் வழிந்தது.
Samayam Tamil rithvika1


அதன் பின் மேடையில் பேசிய ரித்விகாவின் தந்தை உருக்கமாக பேசினார். முதலில் பிக்பாஸுக்கு நனறி தெரிவித்தார். அத்துடன் கமலுக்கு கோடான கோடி நன்றி என்றார்.

‘‘இங்கு ஆசானாக இருந்து போட்டியாளர்களுக்கு எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறியவர் நடிகர் கமல். இது உலக அனுபவம் போல உலகநாயகன் அனுபவம். கமல் முன்னிலையில் இவ்வளவு மக்களிடம் நின்று பேசிக்கொண்டிருக்கின்றேன் என்றால்.. நான் என்ன புண்ணியம் செய்து என் மகளை பெற்றேனோ தெரியவில்லை” என உருக்கமாக கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்