ஆப்நகரம்

பிக்பாஸ் ஓட்டெடுப்பில் முன்னிலையில் இருப்பது இவர்தானாம்!

பிக்பாஸ் போட்டி ஓட்டெடுப்பில் அதிக வாக்குகள் பெற்று நடிகை ரித்விகாதான் முன்னிலையில் இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2018, 7:06 pm
பிக்பாஸ் போட்டி ஓட்டெடுப்பில் அதிக வாக்குகள் பெற்று நடிகை ரித்விகாதான் முன்னிலையில் இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன் நடந்த பிக்பாஸ் சீசன் 1ல் நடந்த குழப்பமும் தற்போது சீசன் 2விலும் நடைபெறவுள்ளது. சீசன் 1ல் இறுதியாக ஆரவ், -சினேகன் இவர்களில் யாரோ ஒருவர் ஜெயிப்பார்கள் என்று மக்கள் முதல் சீசனில் கணித்தார்கள். 2வது சீசனில் ரித்விகா அல்லது ஐஸ்வர்யா ஜெயிப்பார்கள் என்று கருதுகின்றனர்.
Samayam Tamil rithvikaa


ஒரு வாரம் தான் இருக்கிறது நிகழ்ச்சி முடிய, போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். தற்போது நிகழ்ச்சி ஒளிபரப்பும் தொலைக்காட்சி இப்போது வரை இறுதி போட்டியாளர்களில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருக்கிறார் ரித்விகா. முழு விவரம் இதோ, ரித்விகா- 17 லட்சத்திற்கு மேல், ஐஸ்வர்யா- 9 லட்சத்திற்கு மேல், விஜி- 5 லட்சத்திற்கு மேல், ஜனனி- 4 லட்சத்திற்கு மேல், இதில் இன்னொரு ஷாக் என்னவென்றால் இடையில் உள்ளே வந்த விஜி மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்