ஆப்நகரம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரிது வர்மாவிற்கு கல்யாணம்? அவரே கூறிய பதில்

நடிகை ரிது வர்மா தான் காதல் திருமணம் தான் செய்ய உள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 23 Jun 2020, 4:29 pm
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி திரைக்கு வந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மான், ரிது வர்மா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Samayam Tamil Ritu Varma


பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது இந்த படம். நடிகை ரிது வர்மா முதல் முறையாக தமிழ் சினிமாவில் இந்தப் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பு அவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் அவர் நடித்தார், ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலமாக கோலிவுட்டில் ஹீரோயினாக கால்பதித்த ரிது வர்மாவுக்கு அதிக அளவில் ரசிகர்களும் கிடைத்தனர். இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அவர். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என கேட்டதற்கு ஓப்பனாக பதில் கூறி உள்ளார்.

தனது பெற்றோர் திருமணத்திற்காக தான் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ள ரிது வர்மா அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது, தற்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன் என அவர்களிடம் கூறியதாக தெரிவித்து உள்ளார். மேலும் தான் நிச்சயம் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் எனவும் கூறி உள்ளார் அவர்.

தனக்கு தகுதியான ஒருவரை கண்டறியும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என ரிது வர்மா மேலும் கூறியுள்ளார்.


அடுத்து ரிது வர்மா நாணி ஹீரோவாக நடிக்கும் டக்கு ஜெகதீஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. நடிகை சாய் பல்லவி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படும் நிலையில் மற்ற ரோல்களுக்கான பேச்சுவார்த்தை முன்னணி ஹீரோயின்களுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படம் மட்டுமின்றி மேலும் இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ரிது வர்மா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் அணி சசி இயக்கிவரும் ஒரு தெலுங்கு படத்தில் ரிது வர்மா அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் மூலமாக அசோக் செல்வன் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரிது வர்மா சமையல் கலைஞராக நடித்து உள்ளார்.

இந்த படத்தில் அசோக் செல்வன் 100 கிலோ எடை கொண்ட ஒரு chef ஆக நடிக்க உள்ளார். அதற்காக அவர் தனது எடையை 20 கிலோ அதிகரித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்