ஆப்நகரம்

“தமிழர்களை இனி ஏமாற்ற முடியாது”! : ஆர்ஜே பாலாஜி காட்டம்!!

“தமிழர்களை இனி ஏமாற்ற முடியாது”! : ஆர்ஜே பாலாஜி காட்டம்!!

Samayam Tamil 18 Jan 2017, 8:57 am
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் சக்தி ஒன்றுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இருந்து போராடி வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்த சிம்பு, ஹிப் ஹாப் ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் சமூக அக்கறை கொண்டி நடிகர் ஆர்ஜே பாலாஜியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.
Samayam Tamil rj balaji speaks about jallikattu protest
“தமிழர்களை இனி ஏமாற்ற முடியாது”! : ஆர்ஜே பாலாஜி காட்டம்!!


மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை சந்திக்க வந்த ஆர்ஜே பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் என்றால், அதற்காக இப்படி ஒன்று சேர்ந்து போராடுவது நம் ஒற்றுமையின் அடையாளம் என்றார். இனி எந்த பிரச்னையாக இருந்தாலும் வீதிக்கு வந்து போராடுவோம். விவசாயி தற்கொலை, கல்விக்கொள்ளை என்று எந்த பிரச்னை என்றாலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள். இனியும் தமிழன் ஏமாற மாட்டான் என்று கருத்து தெரிவித்தார்.

#JusticeforJallikattu pic.twitter.com/E11nyyMW42 — JusticeforJallikattu (@FullOnCinema) January 17, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்