'லொட லொடவேன' பேசுபவர்களை பார்த்தாலே சிலருக்கு சலிப்பும், எரிச்சலும் ஏற்படும். 'யம்மாடி இவன்கிட்ட மாட்டுனா பேசியே கொல்வான்' என பேச்சு பிரியர்களை கண்டாலே தலை தெறிக்க ஓடுபாவர்களும் உண்டு. ஆனால் தனது பேச்சையே பலமாக பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களும் உண்டு. அதில் ஒருவர்தான் ஆர். ஜே. பாலாஜி. குரலை வைத்தே அடையாளம் காணப்படும் இவரின் கலை வாழ்வு தொடங்கிய இடம் கோவையில் உள்ள' ரேடியோ மிர்ச்சி' வானொலி நிலையம். அதனை தொடர்ந்து சென்னையில் 'பிக் எஃம்மில்' சேர்ந்து, இவர் நிகழ்த்திய 'கிராஸ் டாக்' நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலபடுத்தியது. பிரபலங்கள் முதல் கடைக்கோடி குடிமகன் வரை அனைவரையும் கலாய்த்து, நெட்டிசன்களின் செல்ல பிள்ளையானார் ஆர். ஜே. பாலாஜி. அதனை தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்தார் பாலாஜி.
2013 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'தீயா வேலை செய்யனும் குமாரு' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகம் தந்தார். அதனை தொடர்ந்து வடகறி, நானும் ரவுடி தான், புகழ் போன்ற திரைப்படங்களில் பாலாஜியின் காமெடி ரசிகர்களிடம் கைத்தட்டல்களை பெற்றது.
ஹீரோக்களின் நண்பனாக வலம் வந்து கொண்டிருந்த பாலாஜி,' எல்.கே.ஜி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவே புரொமோசன் பெற்றார். சமகால அரசியலை தனது டைமிங் வசனங்கள் மூலம் நையாண்டி செய்து, அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றார்.
எல்.கே.ஜி திரைப்படத்தின் வெற்றி பாலாஜியை இயக்குநராக அவதாரம் எடுக்க வைத்தது. அண்மையில் OTT யில் வெளியான' மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து காமெடி அதகளம் செய்ததோடு, படத்தை இயக்கவும் செய்திருந்தார். ஆன்மிகத்தை வைத்து நடக்கும் தகடு தத்தங்களை நகைச்சுவையாக காட்சி அமைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து, மீண்டும் ஒரு வெற்றியை சுவைத்தார்.
இந்நிலையில் பாலிவுட் படம் ஒன்றை பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரேஷி நடிப்பில் வெளியான 'பதாய் ஹோ' திரைப்படத்தை, பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். திருமண வயதில் பையன் வைத்திருக்கும் தாய், கர்ப்பம் அடைவதை நகைச்சுவையாகவும், செண்டிமெண்ட்டாகவும் கூறியிருந்தது இந்த திரைப்படம்.
இதில் பாலாஜி தன் பாணி வசனங்களை சொருகி காமெடி விருந்தாக ரசிகர்களுக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 29 கோடி பட்ஜெட்டில் உருவாகி 220 கோடி வசூலை வாரி குவித்த இந்த திரைப்படம், தமிழிலும் ஹிட்டாகும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'தீயா வேலை செய்யனும் குமாரு' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகம் தந்தார். அதனை தொடர்ந்து வடகறி, நானும் ரவுடி தான், புகழ் போன்ற திரைப்படங்களில் பாலாஜியின் காமெடி ரசிகர்களிடம் கைத்தட்டல்களை பெற்றது.
ஹீரோக்களின் நண்பனாக வலம் வந்து கொண்டிருந்த பாலாஜி,' எல்.கே.ஜி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவே புரொமோசன் பெற்றார். சமகால அரசியலை தனது டைமிங் வசனங்கள் மூலம் நையாண்டி செய்து, அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றார்.
எல்.கே.ஜி திரைப்படத்தின் வெற்றி பாலாஜியை இயக்குநராக அவதாரம் எடுக்க வைத்தது. அண்மையில் OTT யில் வெளியான' மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து காமெடி அதகளம் செய்ததோடு, படத்தை இயக்கவும் செய்திருந்தார். ஆன்மிகத்தை வைத்து நடக்கும் தகடு தத்தங்களை நகைச்சுவையாக காட்சி அமைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து, மீண்டும் ஒரு வெற்றியை சுவைத்தார்.
இந்நிலையில் பாலிவுட் படம் ஒன்றை பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரேஷி நடிப்பில் வெளியான 'பதாய் ஹோ' திரைப்படத்தை, பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். திருமண வயதில் பையன் வைத்திருக்கும் தாய், கர்ப்பம் அடைவதை நகைச்சுவையாகவும், செண்டிமெண்ட்டாகவும் கூறியிருந்தது இந்த திரைப்படம்.
இதில் பாலாஜி தன் பாணி வசனங்களை சொருகி காமெடி விருந்தாக ரசிகர்களுக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 29 கோடி பட்ஜெட்டில் உருவாகி 220 கோடி வசூலை வாரி குவித்த இந்த திரைப்படம், தமிழிலும் ஹிட்டாகும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.