சென்னை: கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு யாரும் பயப்பட தேவையில்லை என காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சுதந்திரத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு தைரியமான முயற்சி இது. இதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். கருப்புப் பணத்தை ஒலிக்கவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. இன்று ஒரு நாள் மட்டுமே வங்கிகள் இயங்காது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியமல் தவிக்கும் இத்தருணத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். 2020ஆம் ஆண்டில் நிச்சயம் இந்தியா வல்லரசு நாடாகும் என்பதில் சந்தேகமில்லை என கூறியுள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிப்பது மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது போன்ற காரணங்களுக்காக, இந்தியா முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக, பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.
மேலும், நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் இந்த நோட்டுகள் செல்லாது என்றும், இதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.
இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சுதந்திரத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு தைரியமான முயற்சி இது. இதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். கருப்புப் பணத்தை ஒலிக்கவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. இன்று ஒரு நாள் மட்டுமே வங்கிகள் இயங்காது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியமல் தவிக்கும் இத்தருணத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். 2020ஆம் ஆண்டில் நிச்சயம் இந்தியா வல்லரசு நாடாகும் என்பதில் சந்தேகமில்லை என கூறியுள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிப்பது மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது போன்ற காரணங்களுக்காக, இந்தியா முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக, பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.
மேலும், நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் இந்த நோட்டுகள் செல்லாது என்றும், இதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.