ஆப்நகரம்

ரஜினி, விஜய் பாணியை பின்பற்றுங்கள்: அஜித்திடம் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள்..!

'ஏகே 61' படப்பிடிப்பு தொடர்பாக நடிகர் அஜித்துக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

Samayam Tamil 4 May 2022, 6:50 am
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 'ஏகே 61' படப்பிடிப்பு தொடர்பாக நடிகர் அஜித்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Samayam Tamil Ajith Kumar
Ajith Kumar


செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.கே. செல்வமணி பேசியதாவது, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான FEFSI க்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக ஒப்பந்தம் இருக்கும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளதாக செய்திகள் வந்ததுள்ள போதிலும்,

இது தொடர்பாக தங்களுக்கு நேரடியாக எந்த கடிதமும் வரவில்லை எனவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி க்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக நாளைய தினம் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்

அதே போல,நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8 ஆம் தேதி நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் எந்தவொரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாது என்று தெரிவித்தார். மேலும், நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால் தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும்,

மரண மாஸ் அப்டேட் வெளியிட்ட 'விக்ரம்' படக்குழு: வெறித்தனமான காத்திருப்பில் ரசிகர்கள்.!
'ஏகே 61' படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டுமென நடிகர் அஜித்குமார், இயக்குனர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர்க்கு கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் நடிகர் ரஜினிகாந்த்திடம் கோரிக்கை வைத்த போது அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு படப்பிடிப்பை சென்னையில் வைத்துக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டிலேயே செட் போடுவதற்காக உரிய இட வசதி உள்ளது எனவும், படத்தின் கதைக்கு தேவை என்றால் சில படங்களுக்கு வெளியில் சென்று படப்பிடிப்பு நடத்துவது தவிர்க்க முடியாது ஆனால் ஐதரபாத்தில் போய் தமிழ்நாட்டின் ஊர்களை செட் போட்டு படமாக்குவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார் ஆர்.கே. செல்வமணி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்