ஆப்நகரம்

மறுபடியும் ரீமேக்கை கையில் எடுத்த பாலா: ஹீரோ ஆர்.கே. சுரேஷ்

இயக்குநர் பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 4:58 pm
மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்கநர் பாலா. சமீப காலமாக அவருக்கு நேரம் சரியில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் சீயான் விக்ரம் மகன் துருவை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு அது திருப்தி தராததால் படத்தை கைவிட்டனர்.
Samayam Tamil bala and rk suresh


இதையடுத்து நெட்டிசன்கள் பாலாவை கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி கலாய்த்தும் வந்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் வங்கிக்கொள்ளாமல் தன் அடுத்த படத்தை மிக சிறப்பாக இயக்கப் போவதாக அறிவித்தார் பாலா. அந்த வகையில் அவர் அடுத்ததாக மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜோசப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65 படத்தை நான் இயக்குகிறேனா?: பிரபல இயக்குநர் விளக்கம்

இந்த நிலையில் இதில் ஹீரோவாக நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்க உள்ளாராம். இவர் பில்லா பாண்டி, தாரை தப்பட்டை, மருது போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குமாம். அது மட்டுமின்றி இந்த படத்திற்காக தனது உடல் எடையை சுமார் 20 கிலோ அதிகரித்து நடிக்க உள்ளாராம் சுரேஷ்.

இதை கேட்ட நெட்டிசன்கள் அய்யோ பாவம்... கடைசில இவரை வெச்சா பாலா படம் பண்ண போறாரு என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் பாலாவுக்கு இந்த படமாவது கைகொடுக்குமா என்று பார்ப்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்