ஆப்நகரம்

8 வீடு, தற்போது 2 வீடானது: கவலையுடன் ரமணியம்மாள்!

ஆரம்பத்தில் 8 வீடுகளில் வேலை பார்த்து வந்த நான் தற்போது 2 வீடுகளில் மட்டுமே வேலை செய்து வருகிறேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் ராக்ஸ்டார் ரமணியம்மாள்.

Samayam Tamil 7 Jun 2018, 6:33 pm
ஆரம்பத்தில் 8 வீடுகளில் வேலை பார்த்து வந்த நான் தற்போது 2 வீடுகளில் மட்டுமே வேலை செய்து வருகிறேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் ராக்ஸ்டார் ரமணியம்மாள்.
Samayam Tamil large_rock-star-ramani-ammal-1024x576-46642


பிரபல தொலைக்காட்சியில் சரிகமபா என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் ராக்ஸ்டார் ரமணியம்மாள் பிரபலமானவர். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன் பல வீடுகளில் வீட்டு வேலையை செய்து வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ராக்ஸ்டார் ரமணியம்மாள் ரொம்பவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ரமணியம்மாவிடம் இந்த பாடல் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு உங்களின் கடந்த கால வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கு, அதற்கு ரமணியம்மாள் ‘‘என்னை திருச்சி, மதுரை என்று பாட அழைக்கிறார்கள். மேலும் நான் சினிமாவிலும் பாடி வருகிறேன். இதனால் தற்போது வேலை பார்த்து வரும் வீடுகளில் லீவு கொடுக்க மிகவும் யோசிக்கிறார்கள்.

அதனால் முதலில் எட்டு வீடுகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியால் அந்த வேலையை விட்டுவிட்டேன். இப்போது இரண்டு வீடுகளில் மட்டும் வேலை பார்த்து வருகிறேன். இந்த இரண்டு வீடுகளின் வேலையும் கைவிட்டுப் போய்விடக்கூடாது என்று அந்த கடவுளிடம் தினமும் வேண்டிக் கொள்கிறேன்’’ என்று வருத்தத்துடன் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்