ஆப்நகரம்

நடிகை ரஷ்மிகா ரூ. 1.5 கோடி வரி ஏய்ப்பு, ரூ. 3.94 கோடி சொத்துக்கள் பறிமுதல்?

நடிகை ரஷ்மிகா மந்தனா கணக்கில் காட்டாமல் வைத்திருந்த ரூ. 3.94 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Samayam Tamil 23 Jan 2020, 9:46 am
நடிகை ரஷ்மிகா மந்தனா கணக்கில் காட்டாமல் வைத்திருந்த ரூ. 3.94 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil rs 25 lakh cash rs 3 94 crore assets seized from rashmika mandannas house
நடிகை ரஷ்மிகா ரூ. 1.5 கோடி வரி ஏய்ப்பு, ரூ. 3.94 கோடி சொத்துக்கள் பறிமுதல்?


ரஷ்மிகா மந்தனா

கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வரும் ரஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டில் வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி வருமான வரித்துறையினர் அவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். மேலும் ரஷ்மிகாவின் குடும்பத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

ரூ. 3.94 கோடி சொத்துக்கள்

ரஷ்மிகா 2016-2017ம் ஆண்டுக்கான வருமான வரியை மட்டுமே செலுத்தியதாக கூறப்படுகிறது. ரஷ்மிகா வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ. 25 லட்சம் ரொக்கம், ஆவணங்கள், கணக்கில் காட்டாத ரூ. 3.94 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்மிகா ரூ. 1.5 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு இரண்டு PAN கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐடி ரெய்டு

ரஷ்மிகா வீட்டில் தொடர்ந்து 29 மணிநேரம் சோதனை நடந்துள்ளது. சோதனையின் முடிவில் அதிகாரிகள் ஒரு சூட்கேஸ், 3 பைகள் மற்றும் ஒரு டப்பா நிறைய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். சோதனை நடந்தபோது ரஷ்மிகா வீட்டில் இல்லை. இதையடுத்து அவர் தனது தந்தை மதனுடன் மைசூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

பிரச்சனை

ரஷ்மிகா சமர்பித்துள்ள ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் அவர் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார். வருமான வரித்துறை அதிகாரிகள் ரஷ்மிகா வீட்டில் சோதனை நடத்தியது குறித்து இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதற்கிடையே ரஷ்மிகாவுக்கு ரூ. 250 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக சமூக வலைதளத்தில் புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்