ஆப்நகரம்

சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய நிறுவனத்துக்கு நேர்ந்த அதோ கதி!

கடன் தொல்லையால் சிக்கியிருக்கும் கே.பாலசந்தரின் ‘கவிதாலயா நிறுவனம்’ தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது தமிழ் சினிமாத் துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Samayam Tamil 13 Feb 2018, 6:14 pm
கடன் தொல்லையால் சிக்கியிருக்கும் கே.பாலசந்தரின் ‘கவிதாலயா நிறுவனம்’ தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது தமிழ் சினிமாத் துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil rumours about director k balachanders house auction is false
சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய நிறுவனத்துக்கு நேர்ந்த அதோ கதி!


ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல பெரிய ஹீரோக்களையும், ஹீரோயினிகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர். இவரின் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். அதேபோல், கமல்ஹாசனை வைத்து பல வித்தியாசமான கதைக் களங்களை சினிமாவில் உருவாக்கியவர் பாலச்சந்தர்.

இயக்கத்தோடு மட்டும் நிற்காமல் ‘புன்னகை மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘ரோஜா’, ‘முத்து’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கவிதாலயா நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்தார் கே. பாலசந்தர்.

இந்நிலையில், கவிதாலயா புரடெக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் சார்பில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை செலுத்தப்படாததால், அந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏலத்திற்கு வந்துள்ளது. யு.சி.ஓ. வங்கியில் அந்த நிறுவனம் சார்பாக வாங்கப்பட்ட ரூ.1 கோடியோ 36 லட்சம் பணத்தை செலுத்தவில்லை என்பதால், சென்னை அபிராமபுரத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் ஏலத்திற்கு வர உள்ளன. அதற்கான அறிவிப்பு இன்று ஒரு ஆங்கில செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் அப்படி எந்த சொத்துக்களும் ஏலத்திற்கு விடப்படவில்லை, இந்த செய்தி முற்றிலும் தவறானது என அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்