ஆப்நகரம்

ஆபீஸில் அசிங்கமாக நடந்தார்: பிரபல இயக்குநர் மீது டிவி நடிகை புகார்

பிரபல இயக்குநர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிவி நடிகை ரூபஞ்சனா மித்ரா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Jan 2020, 10:39 am
பிரபல இயக்குநர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிவி நடிகை ரூபஞ்சனா மித்ரா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rupanjana mitra says me too arindham sil calls it a lie
ஆபீஸில் அசிங்கமாக நடந்தார்: பிரபல இயக்குநர் மீது டிவி நடிகை புகார்


ரூபஞ்சனா மித்ரா

பெங்காலி படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களில் நடித்து வருபவர் ரூபஞ்சனா மித்ரா. பெங்காலி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் மீ டூ புகார் தெரிவித்துள்ளார். பிரபல பெங்காலி இயக்குநர் அரிந்தம் சில் மீது தான் அவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் ரூபஞ்சனா கூறியிருப்பதாவது, பூமிகன்யா டிவி சீரியலின் முதல் எபிசோடுக்கான ஸ்க்ரிப்ட்டை வாசித்துக் காண்பிக்கிறேன் என்று கூறி தன் அலுவலகத்திற்கு வரச் சொன்னார் அரிந்தம்.

அரிந்தம் சில்

துர்கா பூஜைக்கு சில நாட்களுக்கு முன்பு அழைத்தார். மாலை 5 மணிக்கு நான் அரிந்தம் சிலின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு அவரைத் தவிர வேறு யாருமே இல்லை. அதை பார்த்து எனக்கு சந்தேகமாக இருந்தது. திடீர் என்று அரிந்தம் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து என் தலையில் கை வைத்து அப்படியே பின்னால் கொண்டு சென்றார். அலுவலகத்தில் அவரும், நானும் தான் இருந்தோம் என்றார் ரூபஞ்சனா.

ஸ்க்ரிப்ட்

அரிந்தமின் செயல் பிடிக்காமல் ஸ்க்ரிப்ட்டை பார்ப்போமா என்று நான் கூறினேன். அவரின் ஆசைக்கு இணங்கும் ஆள் நான் இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டு ஸ்க்ரிப்ட்டை விளக்கத் துவங்கினார். 5 நிமிடத்தில் அவரின் மனைவி அங்கு வந்தார். அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து அழுதேன். சீரியல் வெளியான சேனலுடன் ஒப்பந்தத்தில் இருந்ததால் அரிந்தம் செய்த சில்மிஷம் குறித்து நான் முன்பே தெரிவிக்கவில்லை என்று ரூபஞ்சனா தெரிவித்தார்.

பொய்

ரூபஞ்சனாவின் புகார் குறித்து அரிந்தம் கூறியதாவது, இது அரசியல் ஸ்டண்ட் ஆகும். ரூபஞ்சனா ஏன் இப்படி பேசியுள்ளார் என்று தெரியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். சம்பவம் நடந்ததாக சொல்லும் நாள் அவர் என் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பிறகு, மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்கு மெசேஜ் அனுப்பினார். அந்த மெசேஜ் என்னிடம் தற்போதும் உள்ளது. நான் தவறாக நடந்து கொண்டிருந்தால் அவர் ஏன் அப்படி மெசேஜ் அனுப்புவார். அர் பொய் சொல்கிறர் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்