ஆப்நகரம்

கள்ள காதலே குத்தமில்லை.. மீ டூ எப்படி குத்தமாகும்?- சின்மயிக்கு ஆர்.வி. உதயகுமார் கேள்வி

கள்ளக்காதலே தப்பில்லை எனும் போது மீ டூ எப்படி தப்பாகும் என சர்ச்சைக் கருத்தை இயக்குனர் ஆர் வி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2018, 5:14 pm
சென்னை : மீ டூ குற்றச்சாட்டால் மட்டும் சமூகத்தில் உள்ள ஆண்களை சின்மயி திருத்தி விட முடியும் என நினைக்கிறாரா என இயக்குனர் ஆர் வி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil chinmayi


சென்னையில் நடந்த ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியீடு விழாவில் இயக்குனர் ஆர் வி உதயகுமார் மீ டு குறித்து பேசியார்.

ஆர் வி உதயகுமார் பேசியதாவது :
இந்த உலகத்தில் ஆண், பெண் ஈர்ப்பு இயற்கையானது. அப்படி இல்லை என்றால் அவன் மனிதனே இல்லை. அது வரைமுறைக்கு உள்ளே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது தவறு என கூறலாம்.

அப்படி வரைமுறை மீறியோ, ஒருவரை ஒருவர் பிடிக்காமலோ அந்த விஷயம் நடந்தால் அப்பொழுதே சம்பந்தப்பட்டவர் பேச வேண்டும்.

சின்மயி சமூகத்தை திருத்தி விடுவாரா?
இதை பெரிய விவகாரமாக எடுக்கக் கூடாது. சின்மயியால் மட்டும் இந்த சமூகத்தை திருத்தி விட முடியுமா?. அண்மையில், ஆணும் - ஆணும், பெண்ணும் - பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்றும், ஏன் திருமணத்திற்கு பின் கள்ளக்காதல் கூட தப்பில்லை என நீதிமன்ற கூறியுள்ளது.

அப்போ மீ டூ மட்டும் எப்படி தப்பாகும் என ஆர் வி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்