நேற்றைக்கு சினிமா பிரபலங்களிடையும் , ரசிகர்களிடையும் பேசும்பொருளாக இருந்தது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து. காதலித்து திருமணம் செய்த இவர்கள் 18 ஆண்டு இல்லற வாழ்க்கைக்கு பிறகு நேற்று பிரிவதாக அறிவித்தனர். இதனைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பல சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கருத்துக்களை கூறி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
இதனிடையே தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகரும் மற்றும் நடிகர் விஜய்யின் தந்தையுமாகிய எஸ் .ஏ .சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது, "அவ்வளவு அறிமுகமில்லாதவர்கள் விவாகரத்து செய்தாலே என்னால் அதை தாங்கிக்கொள்ள இயலாது. அவர்களிடம் எனக்கு அந்த அளவு நெருக்கம் இருக்காது, இருப்பினும் நானும் என் மனைவியும் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி அவர்களை சேர்ந்து வாழவைக்க முயற்சிகள் செய்திருக்கிறோம்.
அப்படி இருக்கையில் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரிகிறார்கள் என்று தெரியவரும்போது எப்படி தாங்கிக்கொள்ள முடியும். பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, பிரச்சனைகள் இல்லையெனில் அது வாழ்க்கையே இல்லை. எனவே மனிதர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், அதை நாம் பேசி சரிசெய்துகொள்ளலாம்.
நான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் நாம் வாழ்க்கையை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும். பணமோ, நிம்மதியா, சந்தோஷமோ அதை நாம் எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேட வேண்டும். இதை நான் ஒரு நலன்விரும்பியாக மற்றும் ஒரு ரசிகனாக சொல்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகரும் மற்றும் நடிகர் விஜய்யின் தந்தையுமாகிய எஸ் .ஏ .சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது, "அவ்வளவு அறிமுகமில்லாதவர்கள் விவாகரத்து செய்தாலே என்னால் அதை தாங்கிக்கொள்ள இயலாது. அவர்களிடம் எனக்கு அந்த அளவு நெருக்கம் இருக்காது, இருப்பினும் நானும் என் மனைவியும் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி அவர்களை சேர்ந்து வாழவைக்க முயற்சிகள் செய்திருக்கிறோம்.
அப்படி இருக்கையில் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரிகிறார்கள் என்று தெரியவரும்போது எப்படி தாங்கிக்கொள்ள முடியும். பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, பிரச்சனைகள் இல்லையெனில் அது வாழ்க்கையே இல்லை. எனவே மனிதர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், அதை நாம் பேசி சரிசெய்துகொள்ளலாம்.
நான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் நாம் வாழ்க்கையை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும். பணமோ, நிம்மதியா, சந்தோஷமோ அதை நாம் எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேட வேண்டும். இதை நான் ஒரு நலன்விரும்பியாக மற்றும் ஒரு ரசிகனாக சொல்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.