ஆப்நகரம்

காணாமல் போன சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா மீட்பு!

காணாமல் போன சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

SamayamTamil 8 Mar 2018, 12:24 pm
காணாமல் போன சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil s mukanchand bothras bothra cine financier daughter who rescued in andhrapradesh
காணாமல் போன சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா மீட்பு!


சென்னையில் தியாகராயநகரில் வசித்து வரும் பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா. இவர், கடந்தாண்டு கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், குண்டர் சட்டத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவரைத் தொடர்ந்து, 2 மகன்களும் கைது செய்யப்பட்டு சிறையில், அடைக்கப்பட்டனர்.



இந்த நிலையில், தன் தந்தையின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மகள் கரிஷ்மா போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 3ம் தேதி தியாகராயநகர் போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து, கடந்த இருநாட்களாக தனது மகள் கரிஷ்மா போத்ராவை காணவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார் என்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

முகுந்த்போத்ரா அளித்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கரிஷ்மா போத்ராவுக்கு திருமணம் நடைபெறவில்லை என்பதால், அவர் ஏதாவது காதல் வலையில் சிக்கி அதன் மூலமாக காணாமல் போயிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் குண்டூரில் வைத்து கரிஷ்மா போத்ரா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தந்தை முகுந்த் போத்ரா திட்டியதால் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆந்திராவிலிருந்து சென்னை தேனாம்பேட்டை அழைத்துவரப்பட்ட கரிஷ்மா போத்ராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர், பெண்கள் தங்கும் விடுதியில் தங்க வைகக்ப்பட்டு, இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்