ஆப்நகரம்

கோவில்கள் பற்றி ஜோதிகா பேசியது 100% முதிர்ச்சியற்றது: நடிகர் எஸ்.வி.சேகர் கண்டனம்

ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியது முதிர்ச்சியற்ற பேச்சு என நடிகர் எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Apr 2020, 1:38 pm
நடிகை ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கினார்.
Samayam Tamil Jyothika


36 வயதினிலே படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அவர்.

இந்நிலையில் ஜோதிகா நடித்த ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அந்த கோவிலை பார்க்காமல் போகாதீங்க என்று சொன்னார்கள். அவ்ளோ அழகா இருக்கு. இதற்கு முன்பே போயிருக்கிறேன். உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போல நன்கு பராமரிக்கிறார்கள். அடுத்த நாள் மருத்துவமனையில் ஷூட்டிங் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படவில்லை. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது"

"கோவிலுக்கு அவ்வளவு காசு கொடுக்கிறீங்க, செலவு செய்ரீங்க, பெயிண்ட் அடிக்கிறீங்க, பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள். ப்ளீஸ் அதே காசை கட்டிடத்துக்கு கொடுங்கள், பள்ளிகளுக்கு கொடுங்கள், மருத்துவமனைக்கு கொடுங்கள்" என கூறியுள்ளார் ஜோதிகா.

இது பற்றி பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். "Jothika 100% immatured speech.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்.Ask Ur FATHER IN LAW" என அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்