ஆப்நகரம்

ரஜினியை பத்தி பேசியே பிரபலமாகிடலாம்கிறது மட்டும் நடக்காது: இயக்குநரை விளாசிய எஸ்.வி. சேகர்

ரஜினியை பத்தி பேசியே பிரபமாகிவிடலாம் என்கிற உங்கள் லட்சியம் கடைசி வரை நிறைவேறாது கௌதமன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 2:01 pm
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் வேலை செய்து குடும்பம் நடத்தும் பெப்சி தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யுமாறு பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth


இந்நிலையில் ரஜினி பணம் கொடுத்ததற்கு பதில் மளிகைப் பொருட்கள் கொடுத்திருக்கலாம் என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்தார். இது குறித்து எஸ்.வி. சேகர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை பொருட்கள் கொடுத்து இருக்கலாம்"
- முன்னாள் இயக்குனர் கெளதமன் ஆதங்கம். ;) ஏன் சமைச்சு ஊட்டி விடலாமே. ரஜினியை பத்தி பேசியே பிரபமாயிடலாங்கிற உங்க லட்சியம் கடைசிவரை நிறைவேறாது என்று தெரிவித்துள்ளார்.



எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சரியாக சொன்னீங்க சார். இந்த மாதிரி லூசுத்தனமான ஐடியா எல்லாம் கௌதமனுக்கு மட்டும் தான் வரும். அவருக்கு ஓசியிலேயே மளிகை வாங்கி பழக்கமாகிவிட்டது. அதனால் பழக்க தோஷத்தில் சொல்லியிருப்பார். இது மாதிரி ஆட்களுக்கு தொடர்ந்து நெத்தியடி கொடுங்க சார். இவ்வளவு பேசும் இந்த கௌதமன் எத்தனை லட்சம் ரூபாய் அளித்தாராம் என்று தெரிவித்துள்ளனர்.

21 நாட்கள் ஊரடங்கு: சாப்பாட்டுக்கு நான் என்ன செய்வேன்?: நடிகை கவலை

அடுத்த செய்தி

டிரெண்டிங்