ஆப்நகரம்

கடவுளுடன் ஒப்பிட்ட விஜய்... எஸ்ஏசி செம ஹேப்பி... என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

நடிகர் விஜய் தன்னைப் பற்றி உருகியதை பார்த்து செம ஹேப்பியாகியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.

Samayam Tamil 11 Apr 2022, 11:33 am
நடிகர் விஜய் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பேசியதை பார்த்து செம ஹேப்பியாகியுள்ளார் அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர்.
Samayam Tamil sa chandrasekar happy about vijay talks in interview
கடவுளுடன் ஒப்பிட்ட விஜய்... எஸ்ஏசி செம ஹேப்பி... என்ன சொல்லியிருக்கார் பாருங்க!



விஜய் நேர்க்காணல்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி ரலீஸ் ஆகவுள்ளது. இதனை முன்னிட்டு ப்ரமோஷன் நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்க்காணல் அளித்தார் விஜய். பத்து ஆண்டுகளுக்கு பிறகு விஜய் அளிக்கும் நேர்க்காணல் என்பதால் கடந்த 2 வாரங்களாக விளம்பரம் செய்து வந்தது சன் தொலைக்காட்சி.

கடவுளுக்கு அடுத்தப்படி எனக்கு என் அப்பாதான்... உருகிய விஜய்!

அப்பாவை பற்றியா?

இதில் விஜய்யை, பீஸ்ட் படத்தின் இயக்குநரான நெல்சன்தான் நேர்க்காணல் செய்தார். அப்போது விஜய்க்கும் அவரது அப்பாவான எஸ்ஏசிக்கும் இடையில் மனஸ்தாபம் இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து கேள்வி எழுப்பினார் நெல்சன். நெல்சன் முழுவதுமாக கேள்வியை கேட்டு முடிப்பதற்குள்ளேயே டக்கென பிடித்துக்கொண்ட விஜய், அப்பாவை பற்றியா என கேட்டு பதிலளிக்க தொடங்கினார்.

திடீரென 'அந்த' போட்டோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா.. பரபரக்கும் இன்ஸ்டா!

குடும்பத்தின் ஆணி வேர்

கடவுளுக்கு அடுத்தப்படி எனக்கு என் அப்பதான் என்ற விஜய், இன்று ஒரு மரம் பூக்கலாம் காய்க்கலாம், ஆனால் அதன் வேர்தான் அதற்கு காரணம். என் அப்பாதான் குடும்பத்தின் ஆணி வேர் என்றார். விஜய்யின் இந்த பதில் அவரது அப்பா மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதை காட்டுவதாக இருந்தது.

எஸ்ஏசி ஹேப்பி

இந்நிலையில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விஜய் பேசியதை பார்த்து செம ஹேப்பியாகியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர். இதுகுறித்து பேசியுள்ள எஸ்ஏசி, விஜய் பேசியது தமிழ்நாட்டில் உள்ள எல்லா அப்பா மகன்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

இயல்பாகதான் இருக்கிறோம்

நானும் விஜய்யும் எப்போதும் போல இயல்பாகதான் இருக்கிறோம் என்று கூறியுள்ள அவர், எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை என்று கேட்டுள்ளார். ஊடகங்கள் தான் எங்களுக்குள் பிரச்சனை என எழுதி வருகின்றன என்றும் குற்றம்சாட்டியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்