ஆப்நகரம்

தலைவர் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார்: ரஜினிக்கு சச்சின் புகழாரம்!

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

Samayam Tamil 26 Oct 2021, 5:43 pm
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. கடந்த 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி மற்றும் இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
Samayam Tamil Sachin - Rajinikanth
Sachin - Rajinikanth


நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதினை வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அதே போல் இந்த விழாவில் 'அசுரன்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் விழாவில் ரஜினி, லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷின் மகன்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டபோது அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

சிம்பு மற்றும் அவர் பெற்றோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார்!
இந்நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஒவ்வொரு முறையும் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால், தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்