ஆப்நகரம்

வெறும் 78 ரூபாய் பணத்துடன் சென்னை ஓடி வந்த இயக்குநர் சமுத்திரக்கனி!

வெறும் 78 ரூபாய் பணத்துடன் சென்னை ஓடி வந்த இயக்குநர் சமுத்திரக்கனி!

TOI Contributor 7 May 2017, 2:11 pm
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. தன்னுடைய வித்தியாசமான, சமூக அக்கறை கொண்ட கதை சொல்லும் யுக்தியால் தனக்கென பல ரசிகர்களை கொண்டவர். சுப்ரமணியபுரம் படத்தில் நடிகராக அறிமுகமாகி விசாரணை படம் மூலம் தேசிய விருது பெற்றவர் இவர். இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடலாக திரைப்படங்களை எடுத்து வருகிறார். மேலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் பங்களிப்பை தவறாமல் அளிக்கிறார்.
Samayam Tamil sad story behind director samuthirakani
வெறும் 78 ரூபாய் பணத்துடன் சென்னை ஓடி வந்த இயக்குநர் சமுத்திரக்கனி!


இன்று இவ்வளவு உயரத்தில் இருந்தாலும் இவர் கடந்த வந்த பாதை பல வேதனைகள் நிறைந்தது. இவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்ததுமே, தனது அப்பா பாக்கெட்டில் இருந்து 78 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்துள்ளார். ஆனால் 2 நாட்கள் கூட அவரால் சென்னையில் தங்கமுடியவில்லை.

நடு ரோட்டில் படுத்து உறங்கிய சமுத்திரக்கனி, தன்னிடம் மிச்சம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு விழுப்புரம் வரை வந்துள்ளார். அங்கிருந்து தன் வீட்டிற்கு செல்ல பணமில்லை என்பதால், அங்கு இருந்த ஹோட்டலில் தங்கி 5 நாட்கள் வேலை பார்த்து 25 ரூபாய் சம்பாதித்து தன் ஊருக்கு சென்றிருக்கிறார். அதன்பின்னர் 12ஆம் வகுப்பு படிக்கும் போது, கல்லூரி படிக்கும் என பல முறை சென்னை வந்தாலும், அந்த முறை வந்ததை மறக்க முடியாது என்று சமுத்திரக்கனி மிக உருக்கமாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்