ஆப்நகரம்

தமிழ், தெலுங்கை அடுத்து மீண்டும் மலையாளத்தில் களமிறங்கிய சாய் பல்லவி!

‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, அதையடுத்து தமிழ், மற்றும் தெலுங்கு படங்களை அடுத்து மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 16 Mar 2019, 4:40 pm
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் நட்பு, காதல் பற்றி மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
Samayam Tamil sai-pallavi


இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா ஜெபாஸ்டியன் என மூன்று ஹீரோயின்கள் இருந்தனர். இருந்தும் ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த கதாபாத்திரம் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி மட்டும்தான்.

‘பிரேமம்’ படத்தை அதையடுத்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘களி’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியாகி சுமார் மூன்று வருடங்களாகி விட்டன. அதையடுத்து சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு என நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது மூன்று வருடத்திற்கு பிறகு, மீண்டும் ‘அதிரன்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. இந்தப் படத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.


இந்த படத்தின் போஸ்டரை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மூன்று வருடத்திற்கு பிறகு நடிக்கும் மலையாள படம் என பகிர்ந்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்