ஆப்நகரம்

மாரி 2 நஷ்டம்: சம்பளத்தை விட்டுக் கொடுத்த சாய் பல்லவி!!

தான் நடித்த படம் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தன்னுடைய சம்பளப் பணத்தின் பாதியை நடிகை சாய் பல்லவி விட்டுக் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 5:41 pm
தான் நடித்த படம் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தன்னுடைய சம்பளப் பணத்தின் பாதியை நடிகை சாய் பல்லவி விட்டுக் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil Malar Teacher


‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இந்தப் படத்தில் மலர் டீச்சராக வந்து அனைத்து ரசிகர்களின் இதயங்களிலும் இடம்பிடித்தார் சாய் பல்லவி. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் தமிழில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இதில் குறிப்பாக ரவுடி பேசி பாடல் ரசிகர்களை நெருப்பாக பற்றிக்கொண்டது. அவரின் நடனத்திற்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்தது.

மேலும் சாய் பல்லவி, தெலுங்கில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்த ‘படி படி லெச்சி மனசு’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த டிசம்பரில் வெளியானது. இப்படம் ரூ 22 கோடிக்கு வியாபாரமானது. ஆனால் படம் ரூ 8 கோடி மட்டும் தான் வசூல் செய்ததாம்.

இந்தப் படத்திற்காக நடிகை சாய் பல்லவி முதலில் ஒரு சிறிய தொகையை வாங்கியிருந்தார்.படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் மீதம் ரூ. 40 லட்சத்தை கொடுக்க முன்வந்த போது நடிகை சாய்பல்லவி வேண்டாம் என கூறிவிட்டாராம். உங்கள் நஷ்டத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன் என்றாராம். ஆனாலும், படத் தயாரிப்பாளர் சாய்பல்லவியின் பெற்றோரிடம் அந்தப் பணத்தை கொடுக்க முயற்சித்த போது அவர்களும் வாங்க மறுத்து விட்டனர்.

முன்னணி நடிகர்களே செய்யத் தயங்கும் இந்தமாதிரியான காரியத்தை நடிகை சாய் பல்லவி செய்ததைப் பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்