ஆப்நகரம்

பல கோடி சம்பளம் பேசியும் கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

பிரபல நடிகை சாய் பல்லவிக்கு, பிரபல முன்னணி கம்பெனி ஒன்று பல கோடி சம்பளம் பேசியும் கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

Samayam Tamil 19 Apr 2019, 4:39 pm
‘ப்ரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் பககம் ஈர்த்தார். இதையடுத்து அவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தியா’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Samayam Tamil sai-pallavi


அதையடுத்து தெலுங்கு பல படங்களில் நடித்தார். தற்போது அவர் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் இவர் தமிழில் ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாய் பல்லவி பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் தான், தன் படங்களில் தோன்றுவார் என்று கூறப்படுகின்றது. மேலும், சாய் பல்லவி விளம்பர படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கறாராக கூறியுள்ளார். தற்போது ஒரு முன்னணி கிரீம் நிறுவனம் விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் தருகிறோம் என்று கூறியிருந்தது. அதற்கு நடிகை சாய் பல்லவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்