ஆப்நகரம்

சம்பளத்தை உயர்த்திக் கேட்கும் சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி, தன்னுடைய சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளார்.

Samayam Tamil 21 Dec 2018, 5:38 pm
‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதையடுத்து அவர் மலையாளத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் அறிமுகமான படம் ‘கரு’. அதையடுத்து தற்போது ‘மாரி 2’வில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
Samayam Tamil sai-pallavi


இந்த படத்தில் ‘ஆராத்து ஆனந்தி’ என்ற ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இதே நாளில் சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள ‘படி படி லெச்சு மனசு’ என்ற படமும் வெளியாகிறது. ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில்தான் சாய் பல்லவி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது.’ மாரி-2’ படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் சூர்யாவின் ‘NGK’ வெளியாக இருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் வெற்றியடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சாய்பல்லவியை தற்போது தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்