ஆப்நகரம்

பீட்டர் பாலால் புது சிக்கல்: வனிதாவுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதால் வனிதாவுக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Dec 2020, 3:23 pm
வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தின்போது வனிதாவும், பீட்டரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது.
Samayam Tamil vanitha vijayakumar


திருமணம் முடிந்த மறுநாளே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். என்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்துள்ளார், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எலிசபெத் ஹெலன் தன் புகார் மனுவில் தெரிவித்தார்.

நான் யார் கணவரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஏழரை ஆண்டுகளாக தனியாக இருந்தவரை தான் மணந்தேன் என்று வனிதா விளக்கம் அளித்தார். பணத்தை எதிர்பார்த்து எலிசபெத் ஹெலன் இப்படி எல்லாம் செய்வதாக வனிதா கூறினார். லாக்டவுன் முடிந்த பிறகு ஹெலனுக்கு முறைப்படி விவாகரத்து கொடுக்கப்படும் என்றார் வனிதா.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டனர். பீட்டர் பால் ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று ஹெலன் கூறியபோது அவர் பொய் சொல்வதாக வனிதா தெரிவித்தார். ஆனால் பீட்டர் பால் குடிக்கு அடிமையாக இருப்பதால் அவரை பிரிவதாக வனிதா பின்னர் தெரிவித்தார்.

வனிதா தன் 40வது பிறந்தநாளை கொண்டாட கோவாவுக்கு சென்ற இடத்தில் தான் பீட்டர் பால் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். அங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சென்னை திரும்பிய பிறகு வீட்டிற்கு கூட வராமல் எந்நேரமும் குடிக்கத் துவங்கியிருக்கிறார் பீட்டர் பால். அவரை நம்பி ஏமாந்துவிட்டதாக வனிதா விஜயகுமார் கண்ணீர் விட்டார்.

ரொம்ப குடிக்கிறார், வீட்டுக்கே வரல, ஏமாந்துட்டேன்: வனிதா கண்ணீர்

பீட்டர் பால் விவகாரம் தொடர்பாக எலிசபெத் ஹெலன் நீதிமன்றத்தை அணுகினார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக கஸ்தூரி தெரிவித்தார். இந்நிலையில் எலிசபெத் ஹெலன் தொடர்ந்த வழக்கில் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்