ஆப்நகரம்

வீட்டில் சும்மா இருக்கும்போது இதை செய்ங்க: பிக் பாஸ் சாக்ஷி

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் சும்மா இருப்பவர்கள் புத்தகங்கள் படிக்கலாம் என தான் படித்து வரும் புத்தகங்கள் பெயர்களை கூறியுள்ளார் அவர்.

Samayam Tamil 7 Apr 2020, 11:25 am
இடைவெளி இல்லாமல் சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கு தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டாய ஓய்வு கிடைத்துவிட்டது. அதனால் அனைவரும் வீடுகளிலேயே இருக்கின்றனர்.
Samayam Tamil Sakshi Agarwal


வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, ஓவியம் வரைவது என அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர்.

இது பற்றி நடிகை சாக்ஷி அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தான் தற்போது வீட்டில் இருக்கும் நேரத்தில் நான்கு புத்தகங்களை படித்து வருவதாக கூறியுள்ளார்.

1. ஜோசப் மர்பி எழுதிய ‘Power Of Subconscious Mind’.
2. கேரி ஜான் பிஷப் எழுதிய ‘UNFU*K Yourself’.
3. ஓரன் க்ளாப் எழுதிய ‘Flip The Script’
4. கேரி ஜான் பிஷப் எழுதிய ‘Stop Doing That Sh*t’.

ஆகிய நான்கு புத்தங்கங்களை தான் அவர் படித்து வருகிறாராம். அதை மற்றவர்களும் இணையத்தில் டவுன்லோட் அல்லது கிண்டிலில் வாங்கி படிக்கலாம் என பரிந்துரைத்துளளார்.

மேலும் தொடர்ந்து பல நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது பற்றி பேசிய அவர் "வீட்டிலேயே இருப்பது நமக்கு சலிப்பாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஊரடங்கு மிக முக்கியம். நமது பாதுகாப்பிற்காக நாம் வீட்டிலேயே இருப்பது மிக முக்கியம். இந்த ஊரடங்கு நேரத்தில் என்னை நானே பிஸியாக வைத்துகொள்ள பல்வேறு விஷயங்களை செய்து வருகிறேன். ஓவியம் வரைவது, புத்தகங்கள் படிப்பது என பல விஷயங்களை நான் செய்து வருகிறேன்."

"இது போன்ற ஃபிரீ டைம் மீண்டும் கிடைக்காது. இந்த சமயத்தில் நேரத்தை வீணாகாமல் படிக்க சில சிறந்த புத்தகங்களை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். சொல்லப்போனால் நான் அந்த புத்தங்கங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டேன்."

"வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என மக்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்