ஆப்நகரம்

22 ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் ராஜ்குமார் சந்தோஷி - சல்மான்கான்

டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் படத்தில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் சல்மான்கான் நடிக்கவுள்ளார்.

TNN 12 Apr 2016, 3:37 pm
டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் படத்தில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் சல்மான்கான் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil salman khan in rajkumar sandhoshi direction
22 ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் ராஜ்குமார் சந்தோஷி - சல்மான்கான்


கடந்த 1994-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அந்தாஸ் அப்னா அப்னா’ படத்தில் முதன்முதலாக இணைந்தவர்கள் சல்மான்கானும், இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியும். இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பின்னர் இவர்களது கூட்டணி இணையவில்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைய உள்ளார்கள்.

தற்போது சல்மான், ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து மீண்டும் டைரக்டர் கபீர் கான் இயக்கத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி படத்திலும் நடிக்கவுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் ராஜ்குமார் சந்தோஷி, சல்மானை சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறார். அந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்து போக, இப்போது மீண்டும் இருவரும் இந்தப் படம் மூலம் இணையவுள்ளார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்