ஆப்நகரம்

சல்மான் தங்கை வீட்டில் களவாடிய பணிப்பெண் கைது

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் செல்ல தங்கை அர்பிதா கான் வீட்டில் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திட்டுப்போன சம்பவத்தில், அர்பிதா வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 24 Aug 2016, 11:43 am
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் செல்ல தங்கை அர்பிதா கான் வீட்டில் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திட்டுப்போன சம்பவத்தில், அர்பிதா வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil salmans sisters help held for rs 3 lakh theft
சல்மான் தங்கை வீட்டில் களவாடிய பணிப்பெண் கைது


பாந்த்ராவில் உள்ள அர்பிதா கான் வீட்டில் பணிபுரியும் அஃப்ஸா கான்(36), இரண்டு நாட்களாக பணிக்கு வராததால் சந்தேகம் அடைந்த அர்பிதா போலீசில் புகார் அளித்துள்ளார். அர்பிதா வீட்டில் இருந்து வாசனை திரவியங்கள், ஆடைகள், சண் கிளாசஸ், தங்க நாணயங்கள், பணம் உட்பட ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அஃப்ஸா கான் களவாடியதாக கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுகிழமை அர்பிதா கான் அலமாரியில் உள்ள சில விலையுயர்ந்த பொருட்களை தேடும் போது களவாடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அர்பிதாவின் கார் ஓட்டுனர் மொகமது ஷைக் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அர்பிதா வீட்டில் பணிபுரிந்த சில வேலையாட்கள் மற்றும் ஓட்டுனரிடம் இருந்து உள்ளூர் போலீசார் தகவல் சேகரித்துச் சென்றனர்.

இந்நிலையில், அர்பிதா கான் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பணியாற்றி வந்த அஃப்ஸா கான், அர்பிதா உபயோகிக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆசை கொள்வதும், அதனை பயன்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 30ஆம் தேதி அர்பிதா வெளியூர் சென்ற நிலையில் அனைத்தையும் களவாடிய அஃப்ஸா கான் பணிக்கு வரவில்லை என போலீசார் கூறியுள்ளானர்.

நல்லா சோபரா குடியிருப்பில் வசித்து வந்த அஃப்ஸா கான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்