ஆப்நகரம்

நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டேன்: மீண்டும் சமூக வலைத்தளத்தில் களமிறங்கிய சமந்தா

ஒருமாதமாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த நடிகை சமந்தா தற்போது மீண்டும் களமிறங்கி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 23 Apr 2020, 1:15 pm
சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருக்கு சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
Samayam Tamil Samantha returns to Social Media


இன்ஸ்டாகிராமில் 9.6 மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர். முகநூலில் 12.3 மில்லியன் மற்றும் ட்விட்டரில் 7.9 மில்லியன் followers உள்ளனர்.

சமந்தா எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வந்தார். தனது கணவர் உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தனது செல்ல நாயின் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வந்தார் அவர்.

ஆனால் சென்ற மாதம் 28ம் தேதிக்கு பிறகு அவர் இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு பதிவையும் போடவில்லை. கொரோனா லாக்டவுன் சமயத்தில் சமந்தா இப்படி அமைதியாக இருந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக அவரது ரசிகர்கள் இதை வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர்.

சமந்தா கர்பமாக இருப்பதால் தான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கிறார் என்று கூட வதந்திகள் பரவியது.

இந்நிலையில் கிட்டத்தட்ட ஒருமாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சமந்தா social mediaவில் களமிறங்கியுள்ளார். "நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டேன். #stayhome #staysafe #prayingforyou" என குறிப்பிட்டு தனது நாயுடன் இருக்கும் புகைப்பததை அவர் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram Back from my long sleep 🤓 .. #stayhome #staysafe #prayingforyou A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on Apr 21, 2020 at 7:36pm PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்