ஆப்நகரம்

கணவருக்காக அக்கறை எடுத்தக் கொள்ளும் சமந்தா!

நடிகை சமந்தா, தன்னுடைய கணவர் நாகசைதன்யாவுக்காக அவர் நடிக்கும் படங்கள் மீது மிகுந்த அக்கறை எடுத்து வருகிறார்.

Samayam Tamil 28 Aug 2018, 5:45 pm
நடிகை சமந்தா, தன்னுடைய கணவர் நாகசைதன்யாவுக்காக அவர் நடிக்கும் படங்கள் மீது மிகுந்த அக்கறை எடுத்து வருகிறார்.
Samayam Tamil samantha-naga-chaitanya


நடிகை சமந்தா, தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம்செய்துகொண்டார். இவர் திருமணத்துக்குப் பின் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ஹிட்டானது. அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘யுடர்ன்’ படம் செப்டம்பர் 13ல் வெளியாகிறது.

ஆனால் திருமணத்துக்குப் பின் அவரது கணவர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியடைந்தன. தறபோது நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘ஷைலஜா அல்லுடு ஸ்ரீனு’ படத்தின் ரிலீசும் கேரளா வெள்ளத்தை காரணம் காட்டி தள்ளிப்போனது. உண்மை காரணம் அது இல்லையாம்.

அந்தப் படத்தை பார்த்த நடிகை சமந்தா சில மாற்றங்களை செய்யும்படி இயக்குனரிடம் கண்டிப்பாக கூறிவிட்டாராம். அதை செய்வதற்காகத்தான் தற்போது படம் தள்ளிப்போயுள்ளது. நடிகை சமந்தா, கணவரின் வெற்றிக்காக பல்வேறு வகையில் போராடி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்