ஆப்நகரம்

கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை!!

தனக்கு பிடித்த கதையை மட்டும் தேர்ந்தெடுத்து தற்போது நடிதது வருகிறார் நடிகை சமந்தா.

TOI Contributor 19 Sep 2016, 4:03 pm
தனக்கு பிடித்த கதையை மட்டும் தேர்ந்தெடுத்து தற்போது நடிதது வருகிறார் நடிகை சமந்தா.
Samayam Tamil samantha choose the story and acting in the film
கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை!!


இந்த ஆண்டில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியாயிருக்கும் படங்கள் ‘தெறி’, ‘24’, ‘பிரமோற்சவம்’, ‘ஜனதா கேரேஜ்’ . இந்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன. அடுத்ததாக கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை பொன்ராம் இயக்குகிறார். இந்தப் படமும் 2017ம் ஆண்டுதான் ஆரம்பமாகவுள்ளது. தற்போது நடிப்பதற்கு கைவசம் படங்கள் இல்லை. அப்படியே படங்கள் வந்தாலும் அவர்கள் கூறும் கதையை கேட்டு சமந்தாவுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்கவில்லை. தற்போது தனக்கு பிடித்தமான கதையுள்ள படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.

கூடியவிரைவில் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதால் அவரை தேடி வரும் வாய்ப்புகளை கழட்டி விடுவதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அது உண்மையில்லையாம். சில கதைகளில் வரும் கேரக்டர் அவர் நடிப்பு ஒத்துவராததால் அவர் திருப்பி அனுப்பிவிடுகிறாராம். திரையுலகில் தனக்கென ஒரு இமேஜை வளர்த்துக் கொண்டதால் இனிமேல் நடிக்கும் படங்களில் தன் கேரக்டர் பேசும்படியான கதைகளில் மட்டும் நடிக்கவுள்ளாராம் சமந்தா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்