ஆப்நகரம்

டப்பிங் பேசும் போது கண்ணீர் விட்டு அழுத நடிகை சமந்தா!

சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்திற்கு டப்பிங் பேசும்போது தன்னையறியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் நடிகை சமந்தா.

Samayam Tamil 5 May 2018, 6:40 pm
சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்திற்கு டப்பிங் பேசும்போது தன்னையறியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் நடிகை சமந்தா.
Samayam Tamil nadigaiyar-thilagam


நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. இந்தப் படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியாக நடித்துள்ளார்.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்தப் படத்தில் எமோஷனலான காட்சிகள் நடிகை சமந்தாவுக்கு அதிகமாக உள்ளதாம். சில காட்சிகளில் டப்பிங் பேசும் போது எமோஷனல் தாங்காமல் நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதாராம் சமந்தா.

இந்தப் படம் தெலுங்கில் வருகிற 9ஆம் தேதியும், தமிழில் 11ஆம் தேதியும் வெளியாகிறது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ சூப்பர் ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்