ஆப்நகரம்

​ விளம்பரமின்றி 15 குழந்தைகளின் இருதய ஆபரேஷனுக்கு உதவி செய்த சமந்தா!

நடிகை சமந்தா, விளம்பரமின்றி 15 ஏழை குழந்தைகளின் இருதய ஆபரேஷனுக்கு பண உதவி செய்துள்ளார்.

TOI Contributor 4 Nov 2017, 12:37 am
நடிகை சமந்தா, விளம்பரமின்றி 15 ஏழை குழந்தைகளின் இருதய ஆபரேஷனுக்கு பண உதவி செய்துள்ளார்.
Samayam Tamil samantha helped for 15 children heart operation
​ விளம்பரமின்றி 15 குழந்தைகளின் இருதய ஆபரேஷனுக்கு உதவி செய்த சமந்தா!


நடிகை சமந்தா, தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை சமந்தாவுக்கும், நாகார்ஜுனா மகன் நாகசைதன்னயாவுக்கும் கோவாவில் பெரும்விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

நடிகை சமந்தா நடிகை என்பதையும் தாண்டி அவருக்கு இன்னொரு முகம் இருப்பது பலருக்கும் தெரியாது. நடிகை சமந்தா, ‘பிரதியுஷா’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவியும், மருத்துவ உதவியும் செய்வது இந்த தொண்டு நிறுவனத்தின் பணியாக இருந்து வருகிறது.

இதுவரை விளம்பரமில்லாமல் பல உதவிகளை செய்திருக்கிறார் சமந்தா. தனது திருமணத்தையொட்டி பெரிய அளவில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பிய சமந்தா, சில தன்னார்வதொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உடனடியாக இருதய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் 15 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உடனடியாக ஆபரேஷன்செய்து வைத்தார். அதற்கான முழு செலவு தொகையையும் சமந்தா செலுத்தி உள்ளார். இந்த தொகை சுமார் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்