நடிகை சமந்தாவுக்கும் ,நாக சைதன்யாவுக்கும் இடையிலான திருமணம் இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் நடிகர் சித்தார்த்தோடு சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை சமந்தாவுக்கும்,தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.இரு தரப்பிலிருந்தும் இப்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றாலும்,திருமணத்திற்காக பேச்சுவார்த்தை ஏற்கனவே இரு குடும்பத்தாரிடையே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமந்தா கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும்,நாக சைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் இரு வீட்டினரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக இரு மத முறைகளிலும் தலா ஒருமுறை திருமணம் நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் அடுத்த வருட தொடக்கத்தில் திருமணத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
முதலில் நடிகர் சித்தார்த்தோடு சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை சமந்தாவுக்கும்,தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.இரு தரப்பிலிருந்தும் இப்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றாலும்,திருமணத்திற்காக பேச்சுவார்த்தை ஏற்கனவே இரு குடும்பத்தாரிடையே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமந்தா கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும்,நாக சைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் இரு வீட்டினரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக இரு மத முறைகளிலும் தலா ஒருமுறை திருமணம் நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் அடுத்த வருட தொடக்கத்தில் திருமணத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.