ஆப்நகரம்

லீக்கான சமந்தா புகைப்படம் குறித்து போலீசில் வழக்கு பதிவு!

சமந்தா புகைப்படம் லீக்கானது குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 14 Dec 2017, 2:02 pm
சமந்தா புகைப்படம் லீக்கானது குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil samantha new movie photos leaked police filed the case
லீக்கான சமந்தா புகைப்படம் குறித்து போலீசில் வழக்கு பதிவு!


நடிகை சமந்தா தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில்தான் இவருக்கும் தெலுங்க்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்த கையோடு மற்ற நடிகைகள் போல நடிப்பதை நிறுத்திவிடாமல் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் ‘ரங்கஸ்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஹீரோக ராம் சரண் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு சமந்தா கிராமத்து பெண் வேடத்தில் உள்ள ‘ரங்கஸ்தலம்’ படத்தின் புகைப்படங்கள் லீக்காகி வைரலானது. இந்த படத்திற்கு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் புகைப்படம் எப்படி லீக்கானது குறித்து படக்குழுவினர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்