ஆப்நகரம்

சினிமாவில் பாலியல் தொல்லை பற்றி சமந்தா விளக்கம்

"எல்லாத் துறைகளையும் போல திரைத்துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது."

Samayam Tamil 9 Oct 2018, 2:43 am
தொடர்ந்து பல நடிகைகள் திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி பேசுவதை குறித்து நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil xkearptona-1534573894.


மதுரையில் திங்கட்கிழமை நடந்த தனியார் கைபேசி நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் நடிகை சமந்தா கொண்டார். அவரைப் பார்க்க அந்நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். சிறிது நேரம் ரசிர்களுடன் பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டார் சமந்தா.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமந்தா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்கள்தான் என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் தீர்மானிக்கின்றனர். எனக்கு மதுரை மக்களின் பாசம் மிகவும் பிடிக்கும்.” எனக் கூறினார்.

அப்போது, நடிகைகள் ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீ மற்றும் கங்கனா என பலர் தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பற்றி பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிந சமந்தாவிடம், “நான் பத்து ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். சினிமா நடிகர் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். சினிமாவைக் கடவுளைப் போல மதிக்கிறேன். என் திரைப் பயணத்தில் எந்த விதமான பாலியல் தொல்லைகளும் இல்லை. எல்லாத் துறைகளையும் போல திரைத்துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்