ஆப்நகரம்

நீங்க கர்ப்பமா என கேட்ட நபருக்கு சமந்தா நெத்தியடி பதில்

இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கர்ப்பம் பற்றி கேள்வி கேட்டதற்கு சமந்தா கோபத்துடன் பதில் அளித்திருக்கிறார்.

Samayam Tamil 29 Aug 2020, 5:45 pm
பொதுவாகவே நடிகைகள் திருமணம் செய்துகொண்ட பிறகு அவர்களுக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்துவிட்டதும். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அக்கா, அண்ணி என குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்குவார்கள். இப்படி இருக்கும் டெம்ப்லேட்டை உடைத்து தென்னிந்திய சினிமாவில் திருமணமத்திற்கு பிறகும் தனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சமந்தா.
Samayam Tamil Samantha


அவர் கணவர் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதக்கது. சமந்தா - நாக சைதன்யா திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகி விட்டது. இந்த நிலையில் சமந்தா கர்ப்பம் என அடிக்கடி செய்திகள் வருவதும் வாடிக்கை ஆகி விட்டது. அப்படி செய்தி பரவுதும் அதன் பிறகு சமந்தா அது முற்றிலும் வதந்தி என விளக்கம் அளிப்பதும் அடிக்கடி நடந்திருக்கிறது.

இந்நிலையில் சமந்தா இன்று இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ரசிகர்கள் உடன் உரையாடினார். ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளிப்பதாக அவர் கூறிய நிலையில் பலரும் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் சுவாரஸ்யமான சில கேள்விகளுக்கு அவர் பதில் கூறினார். 'நீங்கள் கர்ப்பமா?' என ஒருவர் கேள்வி கேட்க அதற்கு சமந்தா கூலாக நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

"நான் 2017ல் இருந்து ப்ரெக்னென்ட் என நினைக்கிறேன். இந்த பேபி வெளியில் வர விரும்பவில்லை போல தெரிகிறது" என சமந்தா அந்த நபருக்கு பதிலாக கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது.


இதற்க்கு முன்பு ஒரு பேட்டியில் சமந்தா குழந்தை பெறுவதற்கான திட்டம் பற்றி பேசி இருந்தார். 'நாங்கள் இருவரும் குழந்தை பெறுவதற்காக என்று ஒரு தேதியை திட்டமிட்டு வைத்திருக்கிறோம். நாங்கள் fix செய்திருக்கும் காலம் வரும்போது குழந்தை பெறுவது நிச்சயம் அது நடைபெறும்' என சமந்தா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று இன்ஸ்டாகிராமில் அவர் அளித்த வேறு சில பதில்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 'உங்கள் உயரம் என்ன?' என ஒருவர் கேட்டதற்கு '5 அடி 3 அங்குலம்' என சமந்தா கூறி இருக்கிறார்.

கொரோனா லாக் டவுன் காரணமாக சமந்தா தன்னுடைய வீட்டில் கணவருடன் தான் நேரத்தை செலவிட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தந்து முதல் வெப் சீரிஸானா The Family Man இரண்டாம் சீசனுக்கு டப்பிங் பேசி முடித்திருக்கிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கி இருக்கும் அந்த சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியா மணி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

மேலும் தமிழில் அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு புதிய ஹாரர் படத்தில் சமந்தா நடிக்க உள்ளார். இந்த ஹாரர் படத்தில் பிரசன்னாவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் மட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் சமந்தா முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் நயந்தாரா ஜோடியாக நடிக்க உள்ளனர். லாக் டவுன் முடிந்த பிறகு அதன் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்