ஆப்நகரம்

கணவருக்கு முத்தம் கொடுக்கும்போதும் கூட நடுவில் முதல் மனைவி இருப்பார்: சமந்தா

படுக்கையறையில் நடக்கும் விஷயத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.

Samayam Tamil 22 Sep 2019, 1:12 pm
சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமந்தா தன் கையில் இருக்கும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கை முடித்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil samantha


இந்நிலையில் நடிகை லட்சுமி மஞ்சு நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டுள்ளார். படுக்கையறை ரகசியங்கள் சிலவற்றை தெரிவிக்குமாறு லட்சுமி மஞ்சு சமந்தாவிடம் தெரிவித்தார். அதற்கு சமந்தா பதில் அளிக்க மறுக்கவே, லட்சுமி அவரை பற்றிய ரகசியத்தை போட்டுடைத்தார்.

சமந்தா பற்று லட்சுமி மஞ்சு கூறியதாவது,

அனைத்தையும் என்னை சொல்ல வைக்கிறீர்கள் சமந்தா. திருமணத்திற்கு முன்பு நீங்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தது எனக்கு தெரியும். சிங்கிளாக இருந்தபோதும், ஒரு ஆண் உங்கள் வாழ்வில் வந்த பிறகும் உங்கள் படுக்கையறையில் மாறிய 3 விஷயங்களை சொல்லுங்கள் என்றார்.

அதற்கு சமந்தா கூறியதாவது,

எனக்கும், சைதன்யாவுக்கும் இடையே ஒன்று உள்ளது. சைதன்யாவுக்கு தலையணை தான் முதல் மனைவி. நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் எங்களுக்கு இடையே தலையணை இருக்கும். போதும், போதும் நான் நிறைய பேசிவிட்டேன் என்றார்.

கணவர் பற்றி சமந்தா மேலும் கூறியதாவது,

ஏ மாய சேசாவே படத்தில் நடித்தபோது ஸ்டார் கிட்டான சைதன்யாவுடன் நடிக்கிறேன் என்று இருந்தது. அப்பொழுது அவர் தனது கெரியர் பற்றி சீரியஸாக இருந்தாலும் படம் ஒர்க்அவுட்டானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி என்றிருந்தார். ஆனால் தற்போது அவர் ரொம்ப மெச்சூராகிவிட்டார் என்றார்.

திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா, சமந்தா ஜோடி சேர்ந்து நடித்த மஜிலி தெலுங்கு படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்