ஆப்நகரம்

செங்குன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த சமந்தா

நடிகை சமந்தாவின் வருகையால் செங்குன்றம் ஜி.என்.டி சாலையில் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்தை பாதிக்கப்பட்டது.

Samayam Tamil 15 Apr 2018, 5:48 pm
நடிகை சமந்தாவின் வருகையால் செங்குன்றம் ஜி.என்.டி சாலையில் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்தை பாதிக்கப்பட்டது.
Samayam Tamil 201804151521048030_2_sammu-3._L_styvpf


செங்குன்றம், ஜி.என்.டி. சாலையில் உள்ள தனியார் வணிக வளாக திறப்பு விழாவில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். இதில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர். இதனால், அங்கே ரசிகர்கள் கூட்டம் திரண்டுவிட்டது.

காரில் இருந்து நடிகை சமந்தா இறங்கியதும் ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்து அருகில் செல்ல முயன்றனர். சமந்தா ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்களைத் போலீசார் தடுக்க முயன்றதில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், ஜி.என்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. உடனே, கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

ஒரு மணி நேரத்துக்கு பின் நடிகை சமந்தாவும், பிரியங்காவும் காரில் திரும்பிச்சென்றனர். இதனிடையே போக்குவரத்து 2 மணி நேரமாக முடங்கியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்