ஆப்நகரம்

சமுத்திரக்கனியின் ‘அப்பா 2’ விரைவில் படப்பிடிப்பு!

நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, ‘நாடோடிகள் 2’ படத்திற்கு பிறகு ‘அப்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jun 2018, 4:00 pm
நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, ‘நாடோடிகள் 2’ படத்திற்கு பிறகு ‘அப்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Samayam Tamil 1529323429-3486


நடிகர் சமுத்திரக்கனி தற்போது குணசித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ‘காலா’ மற்றும் ‘கோலி சோடா 2’. இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆண்தேவதை’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், இவரது இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதையடுத்து, சமுத்திரக்கனி கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்