‘சண்டக் கோழி 2’வில் நாயகி கீர்த்தி சுரேஷ் மாற்றப்பட்டதால் படப்பிடிப்பு தாமதமாவதாக சொல்லப்படுகிறது.
நடிகர் விஷாலை வைத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கிய படம் ‘சண்டக் கோழி’. இந்தப் படம் வெற்றி பெற்றது. அப்போதே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்தார் இயக்குனர் லிங்குசாமி. ஏதோ ஒரு காரணத்தால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கான காரணம் தற்போது கைகூடி வருகிறது.
‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது திடீரென்று படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம், விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியவில்லையாம்.
மற்றோரு காரணமும் சொல்லப்படுகிறது. படத்திற்கு கதாநாயகி கிடைக்காதது ஒரு பிரச்சனையாம். முதலில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவர் கேட்ட சம்பள பிரச்னையால் அவர் கைவிடப்பட்டார். பின்னர் கீர்த்தி சுரேஷிடம் பேசினார்கள். அதன் பின்னர் ‘சண்டைக்கோழி-2’வில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது. இதை இரண்டு தரப்பினரும் உறுதி செய்தனர். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மினை போன்று ஹோம்லியான முகத்தை தேடி வருகின்றனர் ‘சண்டக் கோழி 2’ படக்குழுவினர். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிறது.
நடிகர் விஷாலை வைத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கிய படம் ‘சண்டக் கோழி’. இந்தப் படம் வெற்றி பெற்றது. அப்போதே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்தார் இயக்குனர் லிங்குசாமி. ஏதோ ஒரு காரணத்தால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கான காரணம் தற்போது கைகூடி வருகிறது.
‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது திடீரென்று படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம், விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியவில்லையாம்.
மற்றோரு காரணமும் சொல்லப்படுகிறது. படத்திற்கு கதாநாயகி கிடைக்காதது ஒரு பிரச்சனையாம். முதலில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவர் கேட்ட சம்பள பிரச்னையால் அவர் கைவிடப்பட்டார். பின்னர் கீர்த்தி சுரேஷிடம் பேசினார்கள். அதன் பின்னர் ‘சண்டைக்கோழி-2’வில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது. இதை இரண்டு தரப்பினரும் உறுதி செய்தனர். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மினை போன்று ஹோம்லியான முகத்தை தேடி வருகின்றனர் ‘சண்டக் கோழி 2’ படக்குழுவினர். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிறது.