ஆப்நகரம்

Sangamithra: டிராப் ஆனதா சுந்தர்.சியின் பிரம்மாண்ட ‘சங்கமித்ரா’?

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 27 Jun 2018, 11:21 am
சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil டிராப் ஆனதா சுந்தர்.சியின் பிரம்மாண்ட ‘சங்கமித்ரா’?
டிராப் ஆனதா சுந்தர்.சியின் பிரம்மாண்ட ‘சங்கமித்ரா’?


சுந்தர்,சி கடந்த ஆண்டு சங்கமித்ரா என்ற வரலாற்றுப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாக தெரிவித்தார். இதில், ஜெயம்ரவி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு, அதன் போஸ்டர்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, படத்தை எடுக்க நீண்ட நாட்கள் ஆவதால், ஸ்ருதிஹாசன் படத்திலிருந்து விலகி, அவருக்குப் பதிலாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அதற்கு பின் சுந்தர்.சி கலகலப்பு 2, ஜெயம் ரவி டிக்:டிக்:டிக், ஆர்யா கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் பிசியாகி விட்டனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்தப் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் 400 கோடி செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்