ஆப்நகரம்

மகாபாரதா திரைப்படத்திற்கு எதிராக சங்பரிவார் போர்க்கொடி

மலையாள நாவலைத் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படவிருக்கும் திரைப்படத்திற்கு சங்பரிவார் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

TNN 20 Apr 2017, 7:18 pm
மலையாள நாவலைத் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படவிருக்கும் திரைப்படத்திற்கு சங்பரிவார் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil sangh parivar against the mahabharata movie
மகாபாரதா திரைப்படத்திற்கு எதிராக சங்பரிவார் போர்க்கொடி


மகாபாரதத்தைத் தழுவி எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய நாவல் ரண்டமூழம். இந்த நாவல் தமிழிலும் இரண்டாம் உலகம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘மகாபாரதா’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.

ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட இருக்கிற இத்திரைப்படத்தில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு படப்படிப்பைத் தொடங்கி 2020ஆம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எம்.டி.வாசுதேவன் நாயரின் முழு மகாபாரதம் அல்ல. மகாபாரதத்தின் ஒரு பகுதியே. அக்கதையை மகாபாரதம் என்ற பெயரில் படமாக்குவது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சங்பரிவார் அமைப்பு போர்க்குரல் எழுப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்